Posts

"தில்லையில் அம்பலம்"

Image
பாண்டிச்சேரியில் மூன்று மாதகாலம் தொழிற்பயிற்சிக்காக எங்கள் கல்லூரியில் இருந்து நண்பர்கள் பனிரெண்டு பேர் சென்றிருந்தோம். முதன் முறையாக குடும்பத்தை விட்டு தொலைதூர பயணம் . முதல் சில நாட்கள் மனதிற்குள் ஒரு இனம் புரியாத தனிமை என்னை வாட்டி வதைத்தது. நாட்கள் போகப்போக நண்பர்களின் ஆதரவின் காரணமாக சகஜமானேன் . பிறகு விடுமுறை தினங்களில் நானும் நண்பர்களும் பாணடிச்சேரியையும் அதை சுற்றி இருக்கும் இடங்களையும் சுற்றி பார்த்தோம் . ஒவ்வொரு வாரமும் விடுமுறை கழிந்தபின் அடுத்த வார விடுமுறைக்காக காத்திருக்கலானோம்.. இதோ அடுத்த வாரம் வேலைக்கான கால அட்டவணை வெளியாகி விட்டது . வரும் வாரம் புதன்கிழமை எனக்கும் என் நண்பன் ராம்குமாருக்கும் விடுமுறை . இருவரும் பாண்டிச்சேரியில் இருந்து அறுபத்திஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த புகழ் பெற்ற தில்லை நடராஜர் கோவிலுக்கு சென்று நடராஜரை தரிசித்து வரலாம் என்று முடிவு செய்தோம். அதற்கு இன்னும் நான்கு தினங்கள் இருந்தன . ஆனாலும் தினம் தினம் நண்பர்களிடம் அங்கு போவதை பற்றி சிலாகித்து பேசிவந்தேன் . எப்போதும் "தில்லையம்பல நடராஜா" என்ற பாடலை முனு முனுத...

"பிரியாணி"

Image
  பிரியாணி எனக்கு அறிமுகமானது வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் தெற்கு ஆத்தூர் வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தான் . அன்று பஜார் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கும் . பஜார் வியாபாரிகள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யவும் , சங்கத்தின் வரவு செலவு கணக்குகளை சரிபார்க்கவும் கடைகாரர்கள் அனைவரும் கூடும் கூட்டத்தில் ஆர்வமாக கலந்து கொள்ளாத கடைக்காரர்கள் கூட கடைசியாக கூட்டம் முடிந்தவுடன் ஆத்தூர் தாஜ்மஹால் ஓட்டலில் ஆர்டர் செய்து இலவசமாக வழங்கப்படும் பிரியாணியை வாங்க ஆவலாக வந்து இருப்பார்கள் . "தாஜ்மகால்" என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அன்பு , லவ் , பியார் , காதல்னா , ஆத்தூர்காரங்களுக்கு "தாஜ்மகால்" என்றாலே நினைவுக்கு வருவது பிரியாணியாகத்தான் இருக்கும் .சீரக சம்பா அரிசியோடு ஏலக்காய் , பட்டை , கிராம்பு போன்ற வாசனை பொருட்களையும், சிக்கனையும் , நெய்யையும் ஊத்தி ஊரே மணக்கும் வாசனையுடன் செய்த தாஜ்மகால் ஓட்டல் பிரியாணி அவ்வளவு ருசியாக இருக்கும் . அந்த பிரியாணியை நியூஸ் பேப்பரை விரிச்சி வைச்சி அது மேல இளம் தலை வாழையிலையை போட்டு சிக்கனைய...

செம்மறி ஆடு 🐏

Image
  கோடை காலத்தில் நீர்வற்றி இருக்கும் ஆத்தூர் குளம் , ஆத்தூரை சுற்றி இருக்கும்  குளங்கள் மற்றும் அறுவடை முடிந்த வயல்வெளிகளுக்கு செம்மறி ஆடுகளை தூத்துக்குடி நகரத்தை தாண்டி இருக்கும் வானம் பார்த்த கரிசல் பூமியில் இருந்து மேய்ச்சலுக்காக பத்திக்கிட்டு வருவாங்க. நூற்றுக்கணக்கான ஆடுகள் ஒன்றன்பின் ஒன்று இடித்துக்கொண்டு ரோட்டின் ஓரத்தில் இருக்கும் புழுதியை கிளப்பியவாரு கீதாரி கையில் வைத்து இருக்கும் தொரட்டி கம்புக்கு அடிபணிந்து மந்தை மந்தையாக அணிவகுத்து செல்வதே அழகாக இருக்கும் . செம்மறி ஆடுகளை எங்கள் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வீடுகளில் பெரும்பாலும் யாரும் வளர்ப்பதில்லை . செம்மறி ஆட்டுகிடாக்களை வைத்து நடக்கும் "கிடா முட்டு" போன்ற விளையாட்டு பந்தயங்கள் எங்கள் பகுதியில் பிரபலம் இல்லை . அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். எங்கள் பகுதியில் இறைச்சிக்காக மட்டுமே ஆடுகள் வளர்க்கப்படுகின்றன . வெள்ளாட்டின் இறைச்சியோடு ஒப்பிடும் போது செம்மறி ஆட்டின் இறைச்சி சற்று கடினமாகவும் , வாடையுடனும் இருப்பதால், வெள்ளாடுகள் மட்டுமே எங்கள் பகுதிகளில் பெருமளவு வளர்க்கப்படுகின்றன....

பொய்க்காத பாசம் !

Image
அந்த வருடம் வான் பொய்த்ததால் , நீர்நிலைகள் வறண்டு , நிலம் வெடித்து போனது. எங்கள் தோட்டத்தில் வாழைகள் எல்லாம் வாடி வதங்கும் நிலை . ஆழ்துளை கிணற்றில் இருந்து பம்பு செட் மூலமாக வாழை தோட்டத்தின் பட்டங்களில் , எவ்வளவு நீரை இறைத்தாலும் அது விழலுக்கு இறைத்த நீர் போலானது. வளர்ந்து விட்ட வாழைகளை வாட விட மனம் இல்லாமல் .. டீசல் வாங்கி, வாங்கி பம்பு செட்டுக்கு ஊற்றி, ஊற்றுநீரை இறைத்து கொட்டி கை காசு கரைந்தது தான் மிச்சம் , நொய்ந்து போன வாழையில் ஊட்டம் இல்லை.  வாழைதோட்ட காண்களில்  நீர் தேங்காமல் வாழை செழிப்பாக வளரப்போவது சாத்தியமில்லை என்றானது.. ஆத்தூர் வெற்றிலை விவசாயிகள் மற்றும் வாழை விவசாயிகள் சங்கங்கள் மூலமாக அரசாங்கத்தை வேண்ட பாபநாசம் , மணிமுத்தாறு அணைகளில் இருந்து சிறிது தண்ணிரை திறந்து விட்டது அரசு . திருவைகுண்டம் அணையில் இருந்து தென்கால்வாய் வழியாக பாய்ந்து வந்த தண்ணீர். அதுவரை வறண்டு காய்ந்து இருந்த வாய்காலில் விழுந்துகிடந்த மரத்தின் இலை , கிளைகளை எல்லாம் சேர்த்து இழுந்து வந்து கொண்டுடிருந்தது.           கடையில் வியாபாரம்...

" துன்பம் தரும் அழகான நினைவுகள் "

Image
நான் விமானநிலையம் செல்வதற்காக முன்பதிவு செய்திருந்த அந்த டாக்சி நான்  குறிப்பிட்ட நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாக நாங்கள் இருந்த அந்த திருமண மண்டபத்தின் வாசலில்  வந்து நிற்கும் என நான் எதிர்பாக்கவில்லை. அவ்வாறு வந்தது சற்று ஏமாற்றமாகவும்,  வருத்தமாகவும் இருந்தது . இன்னும் ஒரு மணி நேரம் தாமதமாக வந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என தோன்றியது . அது வரை உறவுகளுடன் மகிழ்ச்சியாக இருந்த எனக்குள் ஏதோ ஒரு வகையான இறுக்கம் படர்ந்து என் சீரான சுவாசத்தை தடுக்க கண்களில் நீர் முட்டியது . உறவினர்களின் முன் என் பலவீனத்தை வெளிகாட்ட மனம் இல்லாமல் . கண்ணில் படர்ந்த நீர் வெளியே வரும் முன்பாக இமைகளால் அணை போட்டு மூச்சை ஒரு முறை ஆழ்ந்து இழுத்து விட்டு  என்னை ஆசுவாசப்படுத்தி கொண்டேன். அந்த பெரிய மண்டபத்தின் குளிரூட்டிகள் அணைக்கப்பட்டதால்,  வெளியில் வாட்டி வதைத்த சென்னை வெயிலின் தாக்கம் மண்டபத்திற்குள் பரவ , வெக்கை தாங்க முடியாமல்,  கோழியின் இறக்கைக்குள் பாதுகாப்பை நாடும் கோழி குஞ்சுகளை போல ஆங்காங்கே சுழன்று கொண்டு இருந்த மின்விசிறியின் இறக்கையின் கீழ் குழுமி...

கவிழ்ந்த பயணமும் கலையாத நினைவுகளும்.

Image
 அம்மா சமையல் அறையில் நெய் காய்ச்சி கொண்டு இருந்தார் . தினமும் மோர் கடைந்து சிறிது , சிறிதாக சேர்த்து வைத்த வெண்ணையை உருக்கி கொதிக்க வைத்து பொன் நிறத்தில் பொங்கி வரும் சமயம் இளம் முருங்கை இலையை உருவி போட்டதும் .பட்.. பட்.. என்ற சத்தத்துடன் முருங்கை இலை முருகியதும் அடுப்பை அணைத்து அந்த பாத்திரத்தை கொண்டு வந்து ஹாலின் நடுவில் நாற்காலியில் வைத்து மின்விசிறியை வேகமாக சூழலவிட்டு நெய்யை குளிர வைத்துவிட்டு..  "விக்னேஷ் என்ன பண்ணிட்டு இருக்க. மணி எட்டு ஆச்சு . "  என்றார் . உள்ளறையில் எனக்கு பிடித்த இளம் நீலநிற சட்டையை அயன்பண்ணிக்கிட்டே , "இதோ இப்போ குளிச்சிட்டு வந்திடறேன்.... என்று வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றை நோக்கி ஓடினேன் அந்த முன்னிரவு நேரத்தில் ..         இதோ குளித்து முடித்து கிளம்பியாகி விட்டது . அப்பா தந்த பணத்தை பாக்கெட்டில் பத்திரபடுத்திவிட்டு  வேகவேகமாக கிளம்பிய  என்னை . "ஏல ! சாமி கும்பிட்டியா  ? என அம்மா கேட்க . அமைதியாக  முழித்து கொண்டு நின்ற என்னை "போ போய் சாமிகும்பிட்டு விபூதி பூசிகிட்டு போ !...

ஓலை குடிசை

Image
காலனிய ஆட்சியின் தொடக்கப் பகுதியில் தமிழ்நாட்டில் 90 விழுக்காடு மக்கள் பனை, தென்னை , புல்தரைகள் வேய்ந்த கூரை வீடுகளில் தான் வாழ்ந்தனர் . இவ்வீடுகளின் சுவர்கள் குடிசையாக இருந்தால் செங்கல் இல்லாத மண்சுவர்களாகவும் ,சற்றே பெரிய இரண்டு அறை வீடுகள் சுடப்படாத செங்கல் சுவர்களோடும், அதைவிடப் பெரிய வீடுகள் சுட்ட செங்கல்லால் கட்டப்பட்டவையாகவும் அமைந்திருந்தன. நான் பிறந்து வளர்ந்தது பனை ஓலையால் ஆன கூரையும், செங்கலும், களிமண்ணை குழைத்து கட்டப்பட்ட அந்த மூன்று அறை மண்மாளிகையில் தான் . ஓன்று அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு முறை மழைக்காலம் வருவதற்கு முன்பு பழைய கூரையை மாற்றி புதிய கூரை வேய்வதே அவ்வளவு மகிழ்ச்சிகரமான நிகழ்வாக இருக்கும் . வடக்கு மரந்தலை மாடசாமி கோவிலுக்கு அருகில் எங்களுக்கு ஒரு பனங்காடு இருந்தது . அதில் பூமியின் கற்பகதரு என அழைக்கப்படும் பனைமரங்கள் பல இருந்தன . அந்த பனைமரத்திலிருந்து ஓலைகளை வெட்டி இரண்டு நாட்கள் வாடவிட்டு. பின்பு அவற்றை நீண்ட மயில் தோகை போல நீட்டுவாக்கில் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து பெரியகல்லை அதன் மீது வைத்து விட்டால் . இரண்டு நாட்களி...

" மயக்கமென்ன "

Image
சிமெண்ட் ஆஸ்பெஸ்டாஸ் கூரையின்னால் ஆன அந்த டீக்கடை தெற்கு ஆத்தூர் பேருந்து நிறுத்தத்திற்கு எதிர்ப்புறம் இப்போது சிவந்தி ஆதித்தனார் கல்யாண மண்டபம் அமைந்து இருக்கும் இடத்தில் இருந்தது. தாத்தா காலத்தில் ஆரம்பித்த கடை அது . சுமார் 5000 சதுரடி பெரிதான கடையில் முன் பகுதியில் சிறிய பெட்டி கடையோடு இணைந்த டீ கடை இருந்த பகுதி தவிர்த்து பின்புறம் இருந்த காலி இடத்தில் , விவசாய வேலை பார்க்கும் தொழிலார்களின் மண்வெட்டி , கடப்பாரை , ஏர் கலப்பைகளும் . பொழுது சாயும் நேரத்தில் பஜாரில் வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகளின் பொருட்களும் , ஆத்தூர் வெற்றிலையை நாடெங்கும் ஏற்றுமதி செய்யும் வெற்றிலை வியாபாரிகள் வெற்றிலையை பதமாக பார்சல் செய்வதற்கு தேவையான ஓலைபாய் , தாம்பு கயிறு போன்ற மூலப்பொருட்களும்   போட்டு வைத்து இருந்தனர் . அதன் பின் பகுதியில் மிகப்பெரிய முருங்கை மரமும் , அதில் சிவப்பும் பச்சையும் கலந்த நிறத்தில் பழுத்து தொங்கிய கோவை பழ கொடியும் படர்ந்து இருந்தது . முதலில் என் அக்கா பெயரில் இருந்த கடை சிறிய தீ விபத்தில் சேதம் அடைந்த பிறகு விக்னேஷ்வரா டீ ஸ்டால் என்று எனது ...

போதை "ஆ" சாமி

Image
மாலை ஆறு மணிக்கு எல்லாம் தாமிரபரணி ஆற்றை நோக்கி வானத்தில் வெடி போட்டு , நையான்டி மேளம் முழங்க அம்மனுக்கு அபிஷேகம் பண்ண புனித நீர் எடுத்து வரகிளம்பினாங்க ஊர்ல இருக்கிற ஆண்களில் பெரும்பாலோனோர்  . அப்போது எனக்கு ஒரு பதினைந்து வயசு இருக்கும் . அதற்கு முன்பு வரை ஊர்ல எல்லாரும் ஆத்துக்கு போகும் போது வீட்ல என்னை அங்கு போக அனுமதிப்பது இல்லை . இரவில் வெளிச்சம் இல்லாத ஆற்றங்கரையில் நான் தவறுதலாக ஆற்றுக்குள் இறங்கிவிட்டால் . நீச்சல் தெரிந்து இருந்தாலும் ஆழம் தெரியாத நீர் நிலைகளில் காலை விடுவது ஆபத்தானது . இதற்கு முன்பு இப்படி எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கின்றன . எனக்கு தண்ணீரில் கண்டம் இருப்பதாக கூறி என்னை பயமுறுத்தி இருந்தார் அம்மா . நான் அடிக்கடி வீட்டுக்கு தெரியாமல் வாய்காலுக்கு குளிக்க போவதால் என்னை  தடுப்பதற்காக கூட அம்மா அப்படி சொல்லி இருக்கலாம் என்று நினைக்கின்றேன்.                                ஆனால் இந்த முறை என்னை ஆற்றுக்கு போக அனுமதித்தனர்.  முதல் முறை சாமி ஆடுவ...

மறக்கமுடியாத பாடல்களும் ! அதை தொடர்புடைய நினைவுகளும் !

Image
இசையில் மயங்காதவர் யாரும் இல்லை , திரையிசை பாடல்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவத்தை கொடுக்கிறது. சிலருக்கு தனிமையை கடப்பதற்கு , சிலருக்கு தனிமையை ரசிப்பதற்கு , சிலருக்கு மனதை உற்சாகமூட்டுவதற்கு , சிலருக்கு மனதை ஆற்றுவதற்கு,  சிலருக்கு உடல் களைப்பு நீங்க ,  சிலருக்கு மனக்கவலைகளை மறக்க,  சிலருக்கு மன அமைதியை கொடுக்க . என உலகில் ஒவ்வொருவருக்கும் எதோ ஒரு வகையில் இசை பிடித்திருக்கும் . அதற்கு நானும் விதிவிலக்கில்லை. காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை இந்த உலகின் ஒவ்வொரு தருணங்களையும் மெல்லிய இசையுடனே ரசிக்க பிடிக்கும் .அப்படி சில  பாடல்கள் சிலரையும் அவர்கள் தொடர்புடைய நிகழ்வுகளையும் மறக்கமுடியாத நினைவுகளாக மாற்றி இருக்கிறது மனதில்  ...        அப்பா தீவிர சிவாஜி ரசிகர் . சிவாஜி நடித்த திரைப்பட பாடல்கள் அவருக்கு பிடித்தமானது. ஒரு முறை நான் செய்த சேட்டைக்கு அப்பாவிடம் அடிவாங்கி தேம்பி , தேம்பி அழுது கொண்டே இருந்தேன் . ஒரு சில நிமிடங்களில் அப்பா நான் அழுவதை தாங்காமல் மனம் இறங்கி என்னை சமாதான படுத்த முயன்று.....