Posts

Showing posts with the label கல்லூரி மாணவர்கள்

" நினைவுகளின் நிழல்கள் "

Image
தியாகி பகத்சிங் பேருந்து நிலையம் இந்த பெயர் பலருக்கு பரிச்சயம் இல்லாமல் இருக்கலாம் ,  ஆனால் திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்ட் என்றால் அனைவருக்கும் தெரியும் . தமிழ்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மிகமுக்கியமான பேருந்து நிலையம் இது . என் கல்லூரி காலங்களில் அந்த பேருந்து நிலையம் எனக்கு மிகவும் பரீட்சியமானதாக இருந்தது. எத்தனையோ விதமான மனிதர்கள் , அவர்கள் வாழ்கையின் சந்தோசம் ,அன்பு , துக்கம் , துயரம் , வறுமை , வெறுமை , வெறுப்பு என அவர்களின் மனங்களை பிரதிபலிக்கும் விதவிதமான முகபாவங்களுடன்  பேருந்திற்க்காக காத்திருப்பார்கள் , அவர்களில் இதோ ஒரு குடும்பம் செந்தூர்ஆண்டவரை வணங்கிவிட்டு , தலைமுடி பாரத்தோடு தன் மனபாரத்தையும் முப்பாட்டன் காலடியில் கொட்டிவிட்டதால் இனி வாழ்க்கையில் நிம்மதி மலரும் என்ற நம்பிக்கையுடன் , மனது குளிர வாசனை சந்தனம் பூசிய தலையுடன்  பேருந்துக்காக காத்திருக்கின்றனர் . அவர்களிடம் இருந்து சற்று தள்ளி திருச்செந்தூர் கோர்டில் ஆஜராகிவிட்டு கையில் பூட்டிய விலங்குகளுடன் பாளையங்கோட்டை சிறைக்கு செல்வதற்கு துப்பாக்கி ஏந்திய காவலருடன் வந்து ...