Posts

Showing posts with the label உடற்பயிற்சி

" மயக்கமென்ன "

Image
சிமெண்ட் ஆஸ்பெஸ்டாஸ் கூரையின்னால் ஆன அந்த டீக்கடை தெற்கு ஆத்தூர் பேருந்து நிறுத்தத்திற்கு எதிர்ப்புறம் இப்போது சிவந்தி ஆதித்தனார் கல்யாண மண்டபம் அமைந்து இருக்கும் இடத்தில் இருந்தது. தாத்தா காலத்தில் ஆரம்பித்த கடை அது . சுமார் 5000 சதுரடி பெரிதான கடையில் முன் பகுதியில் சிறிய பெட்டி கடையோடு இணைந்த டீ கடை இருந்த பகுதி தவிர்த்து பின்புறம் இருந்த காலி இடத்தில் , விவசாய வேலை பார்க்கும் தொழிலார்களின் மண்வெட்டி , கடப்பாரை , ஏர் கலப்பைகளும் . பொழுது சாயும் நேரத்தில் பஜாரில் வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகளின் பொருட்களும் , ஆத்தூர் வெற்றிலையை நாடெங்கும் ஏற்றுமதி செய்யும் வெற்றிலை வியாபாரிகள் வெற்றிலையை பதமாக பார்சல் செய்வதற்கு தேவையான ஓலைபாய் , தாம்பு கயிறு போன்ற மூலப்பொருட்களும்   போட்டு வைத்து இருந்தனர் . அதன் பின் பகுதியில் மிகப்பெரிய முருங்கை மரமும் , அதில் சிவப்பும் பச்சையும் கலந்த நிறத்தில் பழுத்து தொங்கிய கோவை பழ கொடியும் படர்ந்து இருந்தது . முதலில் என் அக்கா பெயரில் இருந்த கடை சிறிய தீ விபத்தில் சேதம் அடைந்த பிறகு விக்னேஷ்வரா டீ ஸ்டால் என்று எனது ...