Posts

Showing posts with the label வெளிநாட்டு வாழ்க்கை

" துன்பம் தரும் அழகான நினைவுகள் "

Image
நான் விமானநிலையம் செல்வதற்காக முன்பதிவு செய்திருந்த அந்த டாக்சி நான்  குறிப்பிட்ட நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாக நாங்கள் இருந்த அந்த திருமண மண்டபத்தின் வாசலில்  வந்து நிற்கும் என நான் எதிர்பாக்கவில்லை. அவ்வாறு வந்தது சற்று ஏமாற்றமாகவும்,  வருத்தமாகவும் இருந்தது . இன்னும் ஒரு மணி நேரம் தாமதமாக வந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என தோன்றியது . அது வரை உறவுகளுடன் மகிழ்ச்சியாக இருந்த எனக்குள் ஏதோ ஒரு வகையான இறுக்கம் படர்ந்து என் சீரான சுவாசத்தை தடுக்க கண்களில் நீர் முட்டியது . உறவினர்களின் முன் என் பலவீனத்தை வெளிகாட்ட மனம் இல்லாமல் . கண்ணில் படர்ந்த நீர் வெளியே வரும் முன்பாக இமைகளால் அணை போட்டு மூச்சை ஒரு முறை ஆழ்ந்து இழுத்து விட்டு  என்னை ஆசுவாசப்படுத்தி கொண்டேன். அந்த பெரிய மண்டபத்தின் குளிரூட்டிகள் அணைக்கப்பட்டதால்,  வெளியில் வாட்டி வதைத்த சென்னை வெயிலின் தாக்கம் மண்டபத்திற்குள் பரவ , வெக்கை தாங்க முடியாமல்,  கோழியின் இறக்கைக்குள் பாதுகாப்பை நாடும் கோழி குஞ்சுகளை போல ஆங்காங்கே சுழன்று கொண்டு இருந்த மின்விசிறியின் இறக்கையின் கீழ் குழுமி...