செம்மறி ஆடு 🐏

கோடை காலத்தில் நீர்வற்றி இருக்கும் ஆத்தூர் குளம் , ஆத்தூரை சுற்றி இருக்கும் குளங்கள் மற்றும் அறுவடை முடிந்த வயல்வெளிகளுக்கு செம்மறி ஆடுகளை தூத்துக்குடி நகரத்தை தாண்டி இருக்கும் வானம் பார்த்த கரிசல் பூமியில் இருந்து மேய்ச்சலுக்காக பத்திக்கிட்டு வருவாங்க. நூற்றுக்கணக்கான ஆடுகள் ஒன்றன்பின் ஒன்று இடித்துக்கொண்டு ரோட்டின் ஓரத்தில் இருக்கும் புழுதியை கிளப்பியவாரு கீதாரி கையில் வைத்து இருக்கும் தொரட்டி கம்புக்கு அடிபணிந்து மந்தை மந்தையாக அணிவகுத்து செல்வதே அழகாக இருக்கும் . செம்மறி ஆடுகளை எங்கள் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வீடுகளில் பெரும்பாலும் யாரும் வளர்ப்பதில்லை . செம்மறி ஆட்டுகிடாக்களை வைத்து நடக்கும் "கிடா முட்டு" போன்ற விளையாட்டு பந்தயங்கள் எங்கள் பகுதியில் பிரபலம் இல்லை . அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். எங்கள் பகுதியில் இறைச்சிக்காக மட்டுமே ஆடுகள் வளர்க்கப்படுகின்றன . வெள்ளாட்டின் இறைச்சியோடு ஒப்பிடும் போது செம்மறி ஆட்டின் இறைச்சி சற்று கடினமாகவும் , வாடையுடனும் இருப்பதால், வெள்ளாடுகள் மட்டுமே எங்கள் பகுதிகளில் பெருமளவு வளர்க்கப்படுகின்றன....