Posts

Showing posts with the label vicky rajendran

செம்மறி ஆடு 🐏

Image
  கோடை காலத்தில் நீர்வற்றி இருக்கும் ஆத்தூர் குளம் , ஆத்தூரை சுற்றி இருக்கும்  குளங்கள் மற்றும் அறுவடை முடிந்த வயல்வெளிகளுக்கு செம்மறி ஆடுகளை தூத்துக்குடி நகரத்தை தாண்டி இருக்கும் வானம் பார்த்த கரிசல் பூமியில் இருந்து மேய்ச்சலுக்காக பத்திக்கிட்டு வருவாங்க. நூற்றுக்கணக்கான ஆடுகள் ஒன்றன்பின் ஒன்று இடித்துக்கொண்டு ரோட்டின் ஓரத்தில் இருக்கும் புழுதியை கிளப்பியவாரு கீதாரி கையில் வைத்து இருக்கும் தொரட்டி கம்புக்கு அடிபணிந்து மந்தை மந்தையாக அணிவகுத்து செல்வதே அழகாக இருக்கும் . செம்மறி ஆடுகளை எங்கள் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வீடுகளில் பெரும்பாலும் யாரும் வளர்ப்பதில்லை . செம்மறி ஆட்டுகிடாக்களை வைத்து நடக்கும் "கிடா முட்டு" போன்ற விளையாட்டு பந்தயங்கள் எங்கள் பகுதியில் பிரபலம் இல்லை . அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். எங்கள் பகுதியில் இறைச்சிக்காக மட்டுமே ஆடுகள் வளர்க்கப்படுகின்றன . வெள்ளாட்டின் இறைச்சியோடு ஒப்பிடும் போது செம்மறி ஆட்டின் இறைச்சி சற்று கடினமாகவும் , வாடையுடனும் இருப்பதால், வெள்ளாடுகள் மட்டுமே எங்கள் பகுதிகளில் பெருமளவு வளர்க்கப்படுகின்றன....

திருவிழாவும் கிடா கறி விருந்தும் !

Image
                           திருவிழா என்றாலே கிடா கறி விருந்து இல்லாமல் நிறைவு கிடையாது . ஊர் திருவிழா ஊரே மணக்கும் கிடா கறி விருந்தோடு தான் நிறைவு பெறும் .. அன்று ஊரில் உள்ள அனைவர் வீட்டிலும் கெடாக்கறி வாசம் மூக்கை துளைக்கும். வெள்ளாட்டின் தலை ,நெஞ்சு எலும்பு ,இரத்தம் ,குடல் ,ஈரல் ,கால், மூளை என ஒவ்வொன்றுக்கும் ஒரு சுவை இருக்கின்றது.  அதை அதற்கு ஏற்றவாறு சமைத்து அன்பாக பறிமாறுவதில் தான் அதன் தனித்துவம் இருக்கின்றது..    அப்போது எல்லாம் நிறைய வீடுகளில்  ஆடு வளர்ப்பார்கள் . எங்க வீட்டுல திருவிழாவுக்கு என  இரண்டு கிடா குட்டியை எங்க அப்பா சந்தையில இருந்து வாங்கி வந்து வீட்டில விட்டுருவாங்க. எங்க பகுதி விவசாய பூமி என்பதால், தினமும் அதுக்கு தேவையான வாழைப்பூ மற்றும் வாழை இலை ,தண்டு முதலியன எங்கள் தோட்டத்தில் இருந்துகிடைக்கும் .  இல்லையேன்றால் வெற்றிலை கொடிக்கால் வைத்து இருப்பவர்களிடம் சொன்னால் அகத்திக்கீரையை கொண்டு வந்து கொடுப்பார்கள் .  அவை அவற்றிற்கு போதுமான உணவாக இருக்கும் ....