கவிதை என நம்புங்கள் ! ( Believe it to be poetry ! )
எப்போதும் வருவது அல்ல கவிதை.... எப்போதோ வருவது கவிதை.............. நினைத்தால் வருவது அல்ல கவிதை.. இதயம் கணத்தால் வருவது கவிதை.. என்று வலம்புரி ஜான் கூறிய கவிதையின் இலக்கணத்தை போல .. என் இதயம் மகிழ்ச்சியிலும் , காதலிலும் ,கவலையிலும் , கணத்தபோதெல்லாம், நான் கிறுக்கியவற்றை கவிதை என்ற பெயரில் தொகுத்து அதனுடன் சிங்கப்பூர் தாவரவியல் தோட்டத்தில் நான் எடுத்த வண்ணப்படங்களையும் இணைத்து பார்வையாக்கி இருக்கின்றேன் . என்றும் மாறாத அன்புடன் என்னவர்களுக்காக... என்னவளே ! உணவு தேடும் பறவையாய் உணர்வை கொன்று உயர பறந்தாலும் உள்ளத்தில் உறைந்திருக்கும் உன்னாலே நான் உயிர்ப்பேன்... உயிர்காற்றை உள்ளிழுத்த ஈத்தை புள்ளிசையாய், உன் பேரிதயம் தொட்டு வரும் வாடை பட்ட மனம் இசைக்கும்... நிலவோளியில் நிலம் த...