ஆழ்கிணறும் ஆழ் மனமும்
குழாயை திறந்தால் தண்ணீர் பொல பொலன்னு கொட்டுறதெல்லாம் இந்த காலம் .. பங்காளிங்க எல்லாம் ஒன்னா ஒரே தெருவுல குடியிருந்தாலும்.. வீட்டுல புழங்க தண்ணி எடுக்க ஒரு கிணறு வெட்டாமத்தான் இருந்தாங்க நூற்றாண்டு காலமா.. வீட்டுல ஆடு மாடு கோழின்னு வளர்த்தாலும் அதுகளுக்கு தாகத்துக்கு தண்ணீர் ஊத்த , அடுத்தவுக வீட்டுக்கும் அடுத்த தெருவுக்கும் போக வேண்டியதாக இருந்தது .. கிணறு வெட்டுறது ஒன்னும் சாதாரண விஷயம் இல்லலா .. பாறை இருக்கிற இடத்துல கிணறு வெட்டுனா, சிமெண்டு உறை இறக்க தேவையில்ல, ஆனா பொத பொதன்னு மண்ணு மட்டும் இருக்கிற இடத்துல கிணறு வெட்டுனா சிமெண்டு உறை இறக்கனும் , இல்லன்னா ஊத்து மண்ணு உள்ள வந்து கிணத்த மூடிறும். கிணறு தோண்டுவது உடல் உழைப்போடு சேத்து அதிக செலவும் வைக்கிற பெருத்த கரைச்சபுடிச்ச வேல.. 1978- ல் அம்மா இந்த குடும்பத்துக்குள்ள வாக்கப்பட்டு வர்ற காலம் வரைக்கும் , கிணறு தோண்ட ஒரு காலம் பொறக்கல... 1979 - ல் தை மாசம் ஒருநாள் பங்காளிங்க எல்லாம் கூடி , வீடுகளின் கொல்லை பக்கம் பங்காளிங்க எல்லாரும் புழங்குவதற்கு என விட்டிருந்த குடும்ப பொது இடத்தில் , வீட்ல உடைஞ்ச பழைய...