Posts

Showing posts with the label இயற்கை

மனம் மயங்கும் மழைக்காலம் 🌧☁️🌨⛈️ ( The enchanting rainy season 🌨☁️🌧⛈️)

Image
ஊரில் வெப்பநிலை மிகக்கடுமையாக இருப்பதால் தீபாவளி விடுமுறைக்கு தங்களை குளிர்பிரதேசங்களுக்கு குறைந்தது இரண்டு நாட்களாவது அழைத்து செல்ல வேண்டும் என்று போர்கொடி தூக்கினர் என் மனையும் மகளும். ஒப்புக்கொண்ட நானும் பலவற்றை ஆராய்ந்து மேற்கு மலை தொடர்ச்சியில் அமைந்த மேகங்கள் தவழும் மேகமலை ,தேக்கடி , வாகமன் போன்ற இடங்களுக்கு போகலாமா என பலவாறாக குழம்பி கொண்டிருந்தேன் . அப்போதுதான் அந்த அறிவிப்பு வந்தது , வடகிழக்கு பருவமழை தொடங்கியதின் காரணமாக தென் தமிழகங்களில் பரவலாக மழை பெய்ய வாய்பிருப்பதாக. ஏற்கனவே எங்கே செல்வது என்ன செய்வது போன்ற எண்ணங்களால் அலைக்கழிந்த மனதுடன் இருந்த எனக்கு , இந்த அறிவிப்பு மேலும் குழப்பத்தை விளைவித்தது .இதை பற்றி என்னவளிடம் கலந்தாலோசித்தேன். புலி வருது ...புலிவருது ... என்று புளிப்பு காட்டுபவர்களின் பேச்சை நம்ப வேண்டாம் என்று பழிப்பு காட்டினார்.. வருடம் தோறும் வராமல் போகும் வடகிழக்கு பருமழையை நம்பி தைரியமாக பயணிக்கலாம் என்பது நம்பியவளின் நம்பிக்கை. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை  மூடிய பிறகு வானிலை மாறி , மாரி மாறாமல் பெய்வதை கவன...

எனது ஊரும் இயற்கையோடு வாழ்ந்த வாழ்வும் !

Image
          இயற்கையோடு இயைந்து வாழ்ந்த வாழ்வியலின் அழகான தருணங்களை நினைத்து பார்க்கின்றேன் . எங்கள் ஊர் புன்னைச்சாத்தான்குறிச்சி 100க்கும் குறைவான வீடுகளைக் கொண்ட இயற்கை சூழ்ந்த அழகிய கிராமம்.  எங்கள்  ஊரைச் சுற்றிலும் நெல்வயல்களும் , வெற்றிலை கொடிக்காலும்,  வாழைத் தோட்டங்களுமாக விவசாய நிலங்களும் ,  ஊரின்  வடக்கு பக்கம் ,  ஸ்ரீவைகுண்டம்  தாமிரபரணி ஆற்றின் குறுக்காக கட்டப்பட்டுள்ள அணையின் பிரதான தென்கால் கீழ் உள்ள கடையனோடை மதகு மூலமாக ஆத்தூர் குளத்துக்கு தண்ணீர் வரும் ஆத்தூரான் வாய்க்காலும், வாய்க்கால் ஒரத்தில் மிகப்பெரிய அரச மரமும் , ஆலமரமும் உள்ளது . ஊரைச்சுற்றி இருக்கும் விவசாய நிலங்கள் எல்லாம் சமதளமான மணற்பரப்பில் இருந்து குறைந்தது ஒரு பத்து அடி பள்ளத்தில் தான் அமைந்து இருக்கின்றது . வாய்க்கால் வழியாக வரும் தண்ணீர் , சுலபமாக விவசாய நிலங்களில் பாய்வதற்கு ஏதுவாக , சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே முன்னோர்கள் உழைத்து உருவாக்கிய அமைப்பு இது .         எங்கள் ஊரின் நிலவியல் அமைப்பே ஆச்...