Posts

Showing posts with the label இயற்கை வாழ்க்கை

மகளுக்கு ஓர் மடல் !!

Image
அன்புள்ள மகளுக்கு - அப்பா எழுதும் மடல் ..  என்னை மன்னிக்கவேண்டும் மகளே !        உன்னை தாமிரபரணி நீராடவும்..  வயல் இறங்கி வயல் நண்டு பிடிக்கவும் , நாற்றங்கால் நாற்றை பிடுங்கி வயல் பரவ நடவும், ஊத்தான் குத்தி ஓடும் மீன் பிடிக்கவும் .. மரம் ஏறி அணில் குஞ்சு எடுக்கவும் .. கண்ணி வைத்து பறவை பிடிக்கவும் ... ஓணான் பிடித்து தாத்தாவின் மூக்கு பொடி போட்டு விளையாடவும்.. தட்டான் பிடிக்கவும்.. வயல்வெளிகளின் வேலிகளிலும்,மரங்களிலும் தேனீக்கள் வைத்திருந்த தேனை எடுத்து சாப்பிட்டவும் , வேப்பம் மரம் ஏறி வேப்பம் பழம் சாப்பிடவும். புளியமரம் ஏறி புளியம்பழம் உழுப்பவும்.. ஆறு , கிணறு களில் வளரும் பால் சிப்பியை எடுத்து வந்து கண்ணாடி போல் பட்டைதீட்டி அவற்றில் மெழுகை வைத்து அடைத்து ஆற்று மணலில் வழுக்கும் தடம் அமைத்து பந்தையம் விட்டவும் , குளத்தில் இருந்து கரம்பல் மண் எடுத்து வந்து பைதா ( சக்கரம் ) செய்து உருட்டி விளையாடவும் , கோலிக்கா அடிக்கவும் , பம்பரம் சுற்றவும் , பட்டம் விடவும் , கில்லி அடிக்கவும் , பிள்ளையார் பந்து விளையாடவும் , காத்தாடி சுற்றவும் , ...