Posts

பனையும் வாழ்வும்

Image
பனை அது வெறும் மரமன்று ஒரு பெறும் சமூகத்தின் வாழ்க்கை . மூவேந்தர்களில் சேர மன்னரின் குடிப் பூவாக வெள்ளையும் மஞ்சளும் கலந்த பனம்பூ இருந்திருக்கிறது. சேர மன்னர்களின் காசுகளில் பனை மரம் பொறிக்கப்பட்டுள்ளது. பனைமரமே சேரர்களின் காவல் மரமாக போற்றப் பெற்றது. பறம்பு மலையை ஆண்ட வேளிர் தலைவன் பாரியின் குடிமரமாக பனை இருந்திருக்கிறது. தற்போதைய தமிழ்நாடும் இலங்கையும் இணைந்து குமரியாற்றுக்கு புறம்பாய் விரிந்து கிடந்த தென்னிலப் பகுதிக்கு குறும்பனை நாடு என்ற பெயருண்டு இங்கு பஃறுளியாறு என்ற ஆறும், குமரிக்கோடு என்ற பன்மலையடுக்கத்து மலைத்தொடர் ஒன்றும் இருந்தன. அக்காலத்தில் வாழ்ந்திருந்த தொல்காப்பியர் பனை மரமன்று அது புல்லெனப்படும் என்கிறார். மூங்கில் ,தென்னை ,பாக்கு போலப் பனை புல்லினத்தைத் சேர்ந்ததாகும். நீண்டு உயர்ந்து வளர்வதை மரம் என்று அழைக்கும் தமிழ் மரபுப்படி பனையை மரம் என்று அழைக்கின்றோம். பனை, போந்தை, பெண்ணை என்று இதன் வேறு பெயர்களை தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. கடல்கோளால் அழிந்து போன அந்த நிலப்பரப்பில் பெரும் பனை கூட்டம் இருந்திருக்க கூடும் . அதன் எச்சமாக இப்போதும் இலங்கை மற்...

நாவில் நின்ற நாவல் பழச்சுவை

Image
ஊருக்கு வரும் போதெல்லாம் அந்தந்த (சீசன்) பருவகாலங்களில் விளையும் உணவுவைச் தேடிச் சுவைப்பதுண்டு. அவ்வாறு கிடைக்கும் ஒவ்வொரு உணவுக்கும் தனிச்சுவை உண்டு , நான் சிறுவயதில் சுவைத்த அந்த உணவுகளில் பல  தற்போது கிடைத்தாலும் சிலவை கண்ணில் அகப்படுவதில்லை .. இந்த மே மாதம் ஊருக்கு வந்த போது மஞ்சள் , சிவப்பு நிறங்களில் கொல்லாம் பழம் கிடைத்தது. (https://youtube.com/shorts/kl1NF8DrvWE?si=i3_XkWC_3myFZCyn)  அதிக சாறுடன் துவர்ப்புப்சுவை நிறைந்த கனி அது . எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் செம்மண் தேரிக்காடுகளில் நிறைந்திருக்கும் கொல்லாம் மரங்களில் ( முந்திரி மரம், cashewnut ) ஏப்ரல் மே மாதங்களில் காய்த்து கிடக்கும் அவற்றை வேண்டமட்டும் பறித்து சுவைக்கலாம், ஆனால் அவற்றின் விதைகளை மட்டும் அங்கே விட்டுவிட வேண்டும் என்பது அந்த காட்டின் உரிமையாளர்களின் கட்டுப்பாடு ஏன்னென்றால் அவை தான் cashewnut என்றழைக்கபடும் முந்திரிக்கொட்டைகள்.  அதே போல கொடுக்காப்புளி, வெள்ளரிக்காய், மாம்பழம் , வீட்டில் விளைந்த பப்பாளி மற்றும் நுங்கு , பதநீர் , பனங்கள்ளும் கிடைத்தன.. ...

"சமூகவிரோதிகள்"

Image
                 கடலும் கடல் சார்ந்த நிலமும்  பாண்டிய மன்னர்களின் முக்கிய துறைமுகப் பட்டிணமான காயல்பட்டிணத்தின் அருகாமையில் , மழைநீர் வடிகால் சிற்றோடையின் கரையில் அமைந்திருந்த ஓடக்கரையில் உள்ள தாத்தாவின் வீட்டில் என் பள்ளி கால விடுமுறை நாட்கள் கழிந்தன.. நெல் வயல்கள் , வெற்றிலை கொடிக்கால் , வாழை என செழிப்பான ஈரநிலத் தாவரங்களும் , நன்னீரும் , வளமான வண்டல் மண்ணலால் நிறைந்த வயலும் வயல் சார்ந்த வாழ்வியலில் வளர்ந்த எனக்கு . கணுக்கால் புதைய வெண்பட்டு போன்ற பரந்த மணல் பரப்பில் ஒடை காடும் ,பனங்காடும், கற்றாழை செடிகளும், வேலிக்கு காவலாய் பசுமையான இலைகளும் வாய் விரிந்த மஞ்சள் பூவும் பம்பரக் காயுமாக நிற்க்கும் பூவரசு மரங்களும், பதியும் மணல் தரையில் செல்வதற்கு ஏதுவாக கார் டயர்கள் பொருத்திய மாடு வண்டியும், சுற்றிலும் உப்பு நீருமாக தூத்துக்குடி திருச்செந்தூர் நெடுஞ்சாலையின் மீது அமைந்திருந்த அந்த ஊரின் மாறுபட்ட அந்த சூழல் மிகவும் பிடித்தமானதாக இருந்தது .  காலையில் காடறிய காட்டுக்குள் நுழைந்தால் ஒடை புதர்களில் தேன்கூடு எடுப்பது ...

செங்கதிரோன் சேயோன்

Image
இரவெல்லாம் கண்ணயர்ந்த கதிரவன் விடியலில் தன் சிவந்த கண் திறந்து வானில் மிதக்கும் வெண்பஞ்சு மேகங்களின் மீது விளைவிக்கும் வண்ணக் கோலங்களை காணுகையில் , பிரம்மிக்க வைக்கும் இநத பிரமாண்ட பிரபஞ்சத்தின் முன் நான் என்னும் மமதை மரணித்து , சிறு துரும்பாக நாம் நிற்க்க , இந்த நீலக்கோள் அண்டம் நம்மை நோக்கி நெருங்குவதாக தோன்றும் அந்த வானத்தரசன் வங்கக் கடலில் குளித்து , முகத்தில் தீக்களி பூசி , செங்காந்தழாய் மலர்ந்து, ..கதவின் மறைவில் நின்று கண்ணசைக்கும் காதலியை போல மெல்ல மெல்ல இவ்வுலகை எட்டி பார்க்கும் அழகான இளம் காலையில்.. செம்மண்ணுக்குள் இருந்து பூவெளி வந்த இளமஞ்சளை அரைத்து பூசியது போல மெனியெல்லாம் அவனின் மஞ்சள் கதிர்கள் படர .. ஆதவன் எனும் ஆண்பாலுக்குள் மறைந்திருக்கும் பெண்பால் வெளிப்படும்...   அவ்வேளையில் கதிர் அவனை கட்டியனைக்க தோன்றும், கண் சிறைக்குள் கட்டிப் போடவும் தோன்றும். முத்தமிட தோன்றும் , நினைவுக்குள் அவனை மூழ்கிவைக்க தோன்றும் .. ஆனால் அவனோ நம்மை மெஸ்மரிசம் செய்து , மெல்ல கண்ணயர வைத்து , கணநேரத்தில் கையெட்டா உயரம் தாவிச் சென்றிடுவான். அதிசயமா இது ? இல்லை இதை அதிசயத...

ஆழ்கிணறும் ஆழ் மனமும்

Image
குழாயை திறந்தால் தண்ணீர் பொல பொலன்னு கொட்டுறதெல்லாம் இந்த காலம் .. பங்காளிங்க எல்லாம் ஒன்னா ஒரே தெருவுல குடியிருந்தாலும்.. வீட்டுல புழங்க தண்ணி எடுக்க ஒரு கிணறு வெட்டாமத்தான் இருந்தாங்க நூற்றாண்டு காலமா.. வீட்டுல ஆடு மாடு கோழின்னு வளர்த்தாலும் அதுகளுக்கு தாகத்துக்கு தண்ணீர் ஊத்த , அடுத்தவுக வீட்டுக்கும் அடுத்த தெருவுக்கும் போக வேண்டியதாக இருந்தது ..  கிணறு வெட்டுறது ஒன்னும் சாதாரண விஷயம் இல்லலா .. பாறை இருக்கிற இடத்துல கிணறு வெட்டுனா, சிமெண்டு உறை இறக்க தேவையில்ல, ஆனா பொத பொதன்னு மண்ணு மட்டும் இருக்கிற இடத்துல கிணறு வெட்டுனா சிமெண்டு உறை இறக்கனும் , இல்லன்னா ஊத்து மண்ணு உள்ள வந்து கிணத்த மூடிறும். கிணறு தோண்டுவது உடல் உழைப்போடு சேத்து அதிக செலவும் வைக்கிற பெருத்த கரைச்சபுடிச்ச வேல..  1978- ல் அம்மா இந்த குடும்பத்துக்குள்ள வாக்கப்பட்டு வர்ற காலம் வரைக்கும் , கிணறு தோண்ட ஒரு காலம் பொறக்கல...  1979 - ல் தை மாசம் ஒருநாள் பங்காளிங்க எல்லாம் கூடி , வீடுகளின் கொல்லை பக்கம் பங்காளிங்க எல்லாரும் புழங்குவதற்கு என விட்டிருந்த குடும்ப பொது இடத்தில் , வீட்ல உடைஞ்ச பழைய...

அகத்தின் அழகு..

Image
சுத்தத்திற்கு பெயர் வாங்கிய சிங்கப்பூரில்,  அப்பொழுது தான் மெதுவாக விழித்துக்கொண்டிருந்த காரைகட்டிங்களுக்கு நடுவே  அமைந்திருந்த, காலாங் நதிக்கரை நடைபாதையில் வேகமாக நடந்து கொண்டிருந்தேன் .  சிலமாதங்களாக கிட்டத்தட்ட தினமும் பெய்த மழையினால் பாதையின் இருபக்கமும் வளர்ந்திருந்த பசுமை புற்கள் தாடியை டிரிம் செய்தது போல ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.  மரங்கள் சிலவற்றுக்கு காற்றினால் வரும் ஆபத்தில் இருந்து தப்பிக்க அவைகளின் தலைக்கணத்தை குறைக்க சம்மர் கட்டிங் செய்ப்பட்டிருந்தது. அடர்ந்த கருத்த தலைமுடிகள் நடுவே தோன்றும் வெள்ளை நரைகளை போல பசுமையான இலைகளுக்கு நடுவே ஆங்காங்கே பழுத்த இலைகள் பளிச்சிட்டன..     காதில் மாட்டியிருந்த இயர்போனில் சு. வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி ஒலிப்புத்தகம் மூன்றாவது முறையாக ஒலித்துக்கொண்டிருந்தது.. அதில் அழிந்து போன பல குடிகளின் அடைக்களமாக இருந்த பாரியின் பறம்பு மலையில் நடந்து கொண்டிருந்த,  கொற்றவை கூத்தில் மதங்கனின் பெரும் பறையிசை நடுவே அகுதை குலத்தின் கடைசி வாரிசான நீலன் தீடீரென குதித்து வெறியேறி ஆடத்தொடங்க...