Posts

மத அரசியலும் , பாசிசமும் - 2

Image
ஒரே நாடு , ஒரே மொழி என்று நமக்கு தேசபக்தி பாடம் எடுப்பதெல்லாம் , மக்கள் தொகையில் ஒற்றை இலக்கத்தில் இருக்கும் ஒரு சிறு இனகூட்டத்தின் மொழி , பண்பாடு , முக்கியமாக அவர்கள் அதிகாரத்தை அடைவதற்கு உருவாகிய கடவுள் வழிபாடு போன்றவற்றை அவற்றை பின்பற்றாத மற்ற மொழி , பண்பாடு , வழிபாட்டு முறைகள் மீது திணித்து , அடையாளமற்ற அவர்களின் அடையாளங்களை அனைத்து இடங்களிலும் நிரப்பி , இது அவர்களின் தேசம் என்று அடையாளம் காட்டவே அன்றி வேறில்லை .  பிற மதங்கள் இந்து மதத்தை அழிப்பதாக குற்றம் கூறும் யாவரும் , , இப்போது இந்துகளாக கருதப்படும் இவர்களுக்குள் முற்காலத்தில் நடந்த சைவ , வைணவ சண்டைகளால் ஏற்பட்ட உயிர்பலிகள் , சமணர்களை அழிக்க அவர்களை கழுவேற்றிய வரலாறுகள் , இந்த மண்ணில் தோன்றிய ஆசிவகத்தையும், பெளதத்தையும் அழித்த வரலாறுகளையும் இந்து என்ற பெயரே இந்தியாவில் உள்ள சமயங்களை இணைத்து ஆங்கிலேயன் வைத்த பெயர் அது என்பதையும் வசமாக மறந்து விடுகிறார்கள். சமஸ்கிருதம் மற்றும் வேத மொழியை எதிர்த்து தமிழ் மொழியை நிறுத்திய நாயன்மார்களும், ஆழ்வார்களும் வாழ்ந்த மண்ணில் இப்போது கோவில்களில் இப்போது தமிழ் மட்டு...

காலம் ஒர் அற்புத ஆற்றல் மிக்க கருவி!

Image
அதிகாலையில் எழுந்து , வீட்டின் முற்றத்தில் அமைந்திருந்த மாட்டு தொழுவத்திற்கு சென்ற முத்துநாடார் , தொழுவத்தின் பரண் மேலிருந்த வைக்கோல் கட்டின் பிரியை சற்று தளர்த்தி இரு கைகள் நிறைய வைக்கோலை அள்ளி வந்து , மாட்டின் முன்னாலிருந்த சிறிய மூங்கில் தட்டியாலான அடைப்புக்குள் போட்டுவிட்டு , அருகில் இருந்த கழநீர் தொட்டிக்குள் , வீட்டில் இருந்த கழநீரோடு கொஞ்சம் தவிடையும் கலந்து வைத்து , முளைக்கம்பில் கட்டியிருந்த மாடுகளை அவிழ்த்து அவற்றுக்கு தண்ணீர் காட்டிவிட்டு , தொழுவத்தை விட்டு வெளியே வந்து கை , கால்களை அழம்பி விட்டு , வீட்டின் முன் தாழ்வாரத்தில் இருந்த பெரிய திண்ணையில் தான் படுத்திருந்த பனைநார் கட்டிலில் வந்து அமர்ந்தார் .   தாழ்வாரத்திற்கு அருகிலேயே அமைந்திருந்த அடுக்களையில் இருந்து , ஒரு செம்பு குவளையில் நீராகாரத்தை எடுத்து அதில் சிறிது உப்பை போட்டு , கலக்கி கொண்டு வந்து குடுத்தார் அவரின் மனையாள் காசியம்மா....   செம்பு குவளையை கையில் வாங்கியவர் . குவளை வாயில் படாமல் அன்னாந்தவாறு இரண்டு மடக்கு நீராகாரத்தை வாயில் உற்றி , கையிலிருந்த கருப்பட்டியையு...

" சில்லறை வரம் "

Image
  அரசிடம் இருந்து தனியாருக்கு விற்க்கப்பட்ட அந்த விமானம்  எப்போதும் போல இரண்டு மணிநேரம் தாமதமாக நண்பகல் ஒரு மணியலவில் சென்னை மீனம்பாக்கம் விwமானநிலையத்தில் தரையிறங்கியது . பயணிகள் அனைவரும் அவசரம் , அவசரமாக தங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு , ஓருவரை ஒருவர் முண்டியடித்துக் விமானத்தில் இருந்து வெளியேறுவதற்கு முயன்று கொண்டிருந்தனர் . அவர்களை வேடிக்கை பார்த்தவாரே , எந்த ஒரு அவசரமும் இன்றி அமைதியாக விமானத்தின் இருக்கையில் அமர்ந்திருந்திருந்தேன் .   பொங்கல் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட இரண்டு வார விடுமுறையில் சொந்த ஊருக்கு போய் கொண்டிருக்கின்றேன். என்னுடைய ஊர் சென்னையில் இருந்து 650 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தூத்தூக்குடி மாவட்டத்தின் எல்லைக்கு உட்பட்ட சிறிய கிராமம் . இந்த பயணத்திற்கான திட்டங்கள் அனைத்தும் மூன்று மாதத்திற்கு முன்பாகவே முடிவு செய்யப்பட்டிருந்தது.  சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயிலில் , தாம்பரம் இரயில் நிலையத்தில் சாயங்காலம் 4.30 மணிக்கு ஏறி , மறுநாள் காலை 7.30 க்கு , குரும்பூர் இரயில் நிலை...

கரும்பலகையில் வந்த காதலும் காயமும் ...

Image
 மதியம் இரண்டு மணிக்கு ,மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த  ,திருச்செந்தூர் செல்லும் பேருந்தில் முன்பக்க படிகட்டுக்கு அருகில் , இருவர் மட்டும் உட்காரும் சீட்டில் ஏறி அமர்ந்தான் முகிலன் .  ஒரு அம்மா பஸ்ஸில் கூடை நிறைய மல்லிகை கொண்டு வந்து , முழம் இரண்டு ரூபாய் என்று விற்று கொண்டிருந்தார் . சிலர் அதை நல்ல வாசனையாக இருக்கு என்று வாங்கி கொண்டிருந்தனர். முகிலனுக்கோ மயக்கும் வாசனை கொண்ட அந்த மதுரை மல்லியின் வாசனை சிறிதும் தெரியவில்லை .  அந்த மல்லிகை அவனுக்கு வாசனை அற்ற காகிதப் பூக்களாகத்தான் தெரிந்தது. சில வருடங்கள் முன்பு வரை அவன் இ வ்விதம் எந்த விதமான உணர்வுகளிலும் , உணர்ச்சிகளிலும் பற்றற்று இருந்ததில்லை , ஆனால் இப்போது இவ்வுலகமே  அவனுக்கு சாதாரண காகித பூவாகத்தான் தெரிகிறது.  இதோ டிரைவர் ஏறி அமர்ந்து கியரை மாற்றி ஆக்சிலேட்ரை மெதுவாக காலால் அழுத்த  கரும்புகையை வெளியேற்றியவாறு மாட்டுத்தாவணி பேருந்துநிலையத்தை விட்டு வெளியேறி மதுரை சுற்றுச்சாலையை அடைந்து வேகம் பிடித்தது அந்த அரசுப்பேருந்து .   அக்கினி வெயிலின் உக்கிரத்தில் உர...

டிராகுலா குட்டிகளும், தூக்கம் தொலைத்த இரவுகளும் .

Image
வேலை நிமித்தமாக சிங்கப்பூர் வந்து இருபது தளங்கள் கொண்ட அந்த அடுக்கு மாடி குடியிருப்பின் , பனிரெண்டாவது தளத்தில் இருந்த வீட்டில் ஒரு அறையை மட்டும் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தேன் .சென்னை வெயிலில் சுழன்ற எனக்கு முழுவதுமாக குளிரூட்டப்பட்ட அந்த அறை புதிய அனுபவமாக இருந்தாலும் புதிய இடம், புதிய மொழி , புதிய கலாச்சாரம் , புதிய மக்கள் இவர்களிடம் இருந்து நான் தனிமைப்பட்டது போல ஒர் உணர்வு என்னை வாட்டி எடுக்க . சில இரவுகளாக தூக்கம் வராமல் அவதிபட்டேன் ஏதேதோ எண்ணங்கள் வந்து மனதை அலைக்கழித்துக்கொண்டு இருந்தது. அன்றைய தினம் விளக்கை அனைத்துவிட்டு தூங்க முயற்ச்சித்து புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன் . அப்போது என் மேல் பல கைகள் ஊர்வதுபோல ஒர் உணர்வு ! என்னவாக இருக்கும்... ! என்னவாக இருக்கும்... மனதுக்குள் திகில் படர்ந்தது . மண்டைக்குள் நான் சிறுவதில் பார்த்த 13ம் நம்பர் வீடு , மைடியர் குட்டிச்சாத்தான் போன்ற பேய் படங்களில் வரும் காட்சிகள் மின்னல் கீற்றாய் வந்து போனது ஒரு வேளை இந்த அறையில் யாராவது தூக்கு போட்டு இறந்திருப்பார்களோ . அப்படி இறந்த அந்த நபரின் ஆத்மா நம்மை தொந...

" நினைவுகளின் நிழல்கள் "

Image
தியாகி பகத்சிங் பேருந்து நிலையம் இந்த பெயர் பலருக்கு பரிச்சயம் இல்லாமல் இருக்கலாம் ,  ஆனால் திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்ட் என்றால் அனைவருக்கும் தெரியும் . தமிழ்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மிகமுக்கியமான பேருந்து நிலையம் இது . என் கல்லூரி காலங்களில் அந்த பேருந்து நிலையம் எனக்கு மிகவும் பரீட்சியமானதாக இருந்தது. எத்தனையோ விதமான மனிதர்கள் , அவர்கள் வாழ்கையின் சந்தோசம் ,அன்பு , துக்கம் , துயரம் , வறுமை , வெறுமை , வெறுப்பு என அவர்களின் மனங்களை பிரதிபலிக்கும் விதவிதமான முகபாவங்களுடன்  பேருந்திற்க்காக காத்திருப்பார்கள் , அவர்களில் இதோ ஒரு குடும்பம் செந்தூர்ஆண்டவரை வணங்கிவிட்டு , தலைமுடி பாரத்தோடு தன் மனபாரத்தையும் முப்பாட்டன் காலடியில் கொட்டிவிட்டதால் இனி வாழ்க்கையில் நிம்மதி மலரும் என்ற நம்பிக்கையுடன் , மனது குளிர வாசனை சந்தனம் பூசிய தலையுடன்  பேருந்துக்காக காத்திருக்கின்றனர் . அவர்களிடம் இருந்து சற்று தள்ளி திருச்செந்தூர் கோர்டில் ஆஜராகிவிட்டு கையில் பூட்டிய விலங்குகளுடன் பாளையங்கோட்டை சிறைக்கு செல்வதற்கு துப்பாக்கி ஏந்திய காவலருடன் வந்து ...

" காதலே உன் காலடியில் "

Image
"திருச்செந்தூர்" சூரனை வென்ற முப்பாட்டன் முருகனின் வீரத்திற்கு மட்டுமல்ல  ,  காந்தர்வம் புரிந்து அன்னை வள்ளியை கவர்ந்த காதலுக்கும் பெயர் பெற்ற  திருத்தலம் . தான்தோன்றிகளாக திரிந்தகுடிகளுக்கு தமிழர்கள் என்ற அடையாளத்தை தந்த வேட்டுவர்குடி தலைமகன். குறிப்பறிந்து சொல்லும் குறவர்குடி தலைமகளின் மீது மையம் கொண்டு விவாகம் புரிந்த கதைகள் இன்னும் தமிழக மண்ணில் வள்ளி திருமண நாடகமாக தென்மாவட்டங்களின் கோவில் திருவிழாக்களில் நடைபெற்று வருகின்றன..  இவ்வாறான சிறப்பு வாய்ந்த திருச்செந்தூரில் பிறந்து வளர்ந்து அங்கே இருக்கும் , பிரபலமான ஆண்கள் கல்லூரில் விலங்கியல் இறுதியாண்டு படித்து கொண்டிருந்த வேலன் தன் சிறுவயது முதல் பலமுறை முருகனின் கோவிலுக்கு சென்றிருக்கின்றான் . பாலகனாக பாலமுருகனை பலமுறை தரிசித்தவன். .. இன்று இளம் குமரனான பிறகு. அதே கோவிலுக்கு பொழுதை குதூகலமாக கழிக்க எண்ணி , பாட்டனின் பாதத்தில் பட்டு பரவசமாகும் பரந்து விரிந்த நீீீலவண்ண வங்கக்கடலில் நீராட கல்லூரி வகுப்பை புறக்கணித்துவிட்டு வகுப்பு தோழர்களுடன் வந்திருந்தான்,  வேகமாக வீசும் காற்றின் ஜதிக்கு ...