Posts

" சில்லறை வரம் "

Image
  அரசிடம் இருந்து தனியாருக்கு விற்க்கப்பட்ட அந்த விமானம்  எப்போதும் போல இரண்டு மணிநேரம் தாமதமாக நண்பகல் ஒரு மணியலவில் சென்னை மீனம்பாக்கம் விwமானநிலையத்தில் தரையிறங்கியது . பயணிகள் அனைவரும் அவசரம் , அவசரமாக தங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு , ஓருவரை ஒருவர் முண்டியடித்துக் விமானத்தில் இருந்து வெளியேறுவதற்கு முயன்று கொண்டிருந்தனர் . அவர்களை வேடிக்கை பார்த்தவாரே , எந்த ஒரு அவசரமும் இன்றி அமைதியாக விமானத்தின் இருக்கையில் அமர்ந்திருந்திருந்தேன் .   பொங்கல் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட இரண்டு வார விடுமுறையில் சொந்த ஊருக்கு போய் கொண்டிருக்கின்றேன். என்னுடைய ஊர் சென்னையில் இருந்து 650 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தூத்தூக்குடி மாவட்டத்தின் எல்லைக்கு உட்பட்ட சிறிய கிராமம் . இந்த பயணத்திற்கான திட்டங்கள் அனைத்தும் மூன்று மாதத்திற்கு முன்பாகவே முடிவு செய்யப்பட்டிருந்தது.  சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயிலில் , தாம்பரம் இரயில் நிலையத்தில் சாயங்காலம் 4.30 மணிக்கு ஏறி , மறுநாள் காலை 7.30 க்கு , குரும்பூர் இரயில் நிலை...

கரும்பலகையில் வந்த காதலும் காயமும் ...

Image
 மதியம் இரண்டு மணிக்கு ,மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த  ,திருச்செந்தூர் செல்லும் பேருந்தில் முன்பக்க படிகட்டுக்கு அருகில் , இருவர் மட்டும் உட்காரும் சீட்டில் ஏறி அமர்ந்தான் முகிலன் .  ஒரு அம்மா பஸ்ஸில் கூடை நிறைய மல்லிகை கொண்டு வந்து , முழம் இரண்டு ரூபாய் என்று விற்று கொண்டிருந்தார் . சிலர் அதை நல்ல வாசனையாக இருக்கு என்று வாங்கி கொண்டிருந்தனர். முகிலனுக்கோ மயக்கும் வாசனை கொண்ட அந்த மதுரை மல்லியின் வாசனை சிறிதும் தெரியவில்லை .  அந்த மல்லிகை அவனுக்கு வாசனை அற்ற காகிதப் பூக்களாகத்தான் தெரிந்தது. சில வருடங்கள் முன்பு வரை அவன் இ வ்விதம் எந்த விதமான உணர்வுகளிலும் , உணர்ச்சிகளிலும் பற்றற்று இருந்ததில்லை , ஆனால் இப்போது இவ்வுலகமே  அவனுக்கு சாதாரண காகித பூவாகத்தான் தெரிகிறது.  இதோ டிரைவர் ஏறி அமர்ந்து கியரை மாற்றி ஆக்சிலேட்ரை மெதுவாக காலால் அழுத்த  கரும்புகையை வெளியேற்றியவாறு மாட்டுத்தாவணி பேருந்துநிலையத்தை விட்டு வெளியேறி மதுரை சுற்றுச்சாலையை அடைந்து வேகம் பிடித்தது அந்த அரசுப்பேருந்து .   அக்கினி வெயிலின் உக்கிரத்தில் உர...

டிராகுலா குட்டிகளும், தூக்கம் தொலைத்த இரவுகளும் .

Image
வேலை நிமித்தமாக சிங்கப்பூர் வந்து இருபது தளங்கள் கொண்ட அந்த அடுக்கு மாடி குடியிருப்பின் , பனிரெண்டாவது தளத்தில் இருந்த வீட்டில் ஒரு அறையை மட்டும் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தேன் .சென்னை வெயிலில் சுழன்ற எனக்கு முழுவதுமாக குளிரூட்டப்பட்ட அந்த அறை புதிய அனுபவமாக இருந்தாலும் புதிய இடம், புதிய மொழி , புதிய கலாச்சாரம் , புதிய மக்கள் இவர்களிடம் இருந்து நான் தனிமைப்பட்டது போல ஒர் உணர்வு என்னை வாட்டி எடுக்க . சில இரவுகளாக தூக்கம் வராமல் அவதிபட்டேன் ஏதேதோ எண்ணங்கள் வந்து மனதை அலைக்கழித்துக்கொண்டு இருந்தது. அன்றைய தினம் விளக்கை அனைத்துவிட்டு தூங்க முயற்ச்சித்து புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன் . அப்போது என் மேல் பல கைகள் ஊர்வதுபோல ஒர் உணர்வு ! என்னவாக இருக்கும்... ! என்னவாக இருக்கும்... மனதுக்குள் திகில் படர்ந்தது . மண்டைக்குள் நான் சிறுவதில் பார்த்த 13ம் நம்பர் வீடு , மைடியர் குட்டிச்சாத்தான் போன்ற பேய் படங்களில் வரும் காட்சிகள் மின்னல் கீற்றாய் வந்து போனது ஒரு வேளை இந்த அறையில் யாராவது தூக்கு போட்டு இறந்திருப்பார்களோ . அப்படி இறந்த அந்த நபரின் ஆத்மா நம்மை தொந...

" நினைவுகளின் நிழல்கள் "

Image
தியாகி பகத்சிங் பேருந்து நிலையம் இந்த பெயர் பலருக்கு பரிச்சயம் இல்லாமல் இருக்கலாம் ,  ஆனால் திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்ட் என்றால் அனைவருக்கும் தெரியும் . தமிழ்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மிகமுக்கியமான பேருந்து நிலையம் இது . என் கல்லூரி காலங்களில் அந்த பேருந்து நிலையம் எனக்கு மிகவும் பரீட்சியமானதாக இருந்தது. எத்தனையோ விதமான மனிதர்கள் , அவர்கள் வாழ்கையின் சந்தோசம் ,அன்பு , துக்கம் , துயரம் , வறுமை , வெறுமை , வெறுப்பு என அவர்களின் மனங்களை பிரதிபலிக்கும் விதவிதமான முகபாவங்களுடன்  பேருந்திற்க்காக காத்திருப்பார்கள் , அவர்களில் இதோ ஒரு குடும்பம் செந்தூர்ஆண்டவரை வணங்கிவிட்டு , தலைமுடி பாரத்தோடு தன் மனபாரத்தையும் முப்பாட்டன் காலடியில் கொட்டிவிட்டதால் இனி வாழ்க்கையில் நிம்மதி மலரும் என்ற நம்பிக்கையுடன் , மனது குளிர வாசனை சந்தனம் பூசிய தலையுடன்  பேருந்துக்காக காத்திருக்கின்றனர் . அவர்களிடம் இருந்து சற்று தள்ளி திருச்செந்தூர் கோர்டில் ஆஜராகிவிட்டு கையில் பூட்டிய விலங்குகளுடன் பாளையங்கோட்டை சிறைக்கு செல்வதற்கு துப்பாக்கி ஏந்திய காவலருடன் வந்து ...

" காதலே உன் காலடியில் "

Image
"திருச்செந்தூர்" சூரனை வென்ற முப்பாட்டன் முருகனின் வீரத்திற்கு மட்டுமல்ல  ,  காந்தர்வம் புரிந்து அன்னை வள்ளியை கவர்ந்த காதலுக்கும் பெயர் பெற்ற  திருத்தலம் . தான்தோன்றிகளாக திரிந்தகுடிகளுக்கு தமிழர்கள் என்ற அடையாளத்தை தந்த வேட்டுவர்குடி தலைமகன். குறிப்பறிந்து சொல்லும் குறவர்குடி தலைமகளின் மீது மையம் கொண்டு விவாகம் புரிந்த கதைகள் இன்னும் தமிழக மண்ணில் வள்ளி திருமண நாடகமாக தென்மாவட்டங்களின் கோவில் திருவிழாக்களில் நடைபெற்று வருகின்றன..  இவ்வாறான சிறப்பு வாய்ந்த திருச்செந்தூரில் பிறந்து வளர்ந்து அங்கே இருக்கும் , பிரபலமான ஆண்கள் கல்லூரில் விலங்கியல் இறுதியாண்டு படித்து கொண்டிருந்த வேலன் தன் சிறுவயது முதல் பலமுறை முருகனின் கோவிலுக்கு சென்றிருக்கின்றான் . பாலகனாக பாலமுருகனை பலமுறை தரிசித்தவன். .. இன்று இளம் குமரனான பிறகு. அதே கோவிலுக்கு பொழுதை குதூகலமாக கழிக்க எண்ணி , பாட்டனின் பாதத்தில் பட்டு பரவசமாகும் பரந்து விரிந்த நீீீலவண்ண வங்கக்கடலில் நீராட கல்லூரி வகுப்பை புறக்கணித்துவிட்டு வகுப்பு தோழர்களுடன் வந்திருந்தான்,  வேகமாக வீசும் காற்றின் ஜதிக்கு ...

"வாட்டர் டேங்கும் விலாங்கு மீனும்""

Image
காலையில் கடைக்கு கிளம்பிய தாத்தாவிடம் அடம்பிடித்து வாங்கிய ஐம்பது பைசாவில், ஊருக்குள் இருந்த கடைக்கார தாத்தாவின் கடையில் அவரை படாத பாடுபடுத்தி , அவரிடம் திட்டு வாங்கி கொண்டு பார்த்து பார்த்து வாங்கி வந்த கண்ணாடி கோலிகுண்டுகளை எல்லாம் விளையாடி தோற்கும் நிலையில் இருந்த என்னிடம் வந்த என் நண்பன் மெதுவான குரலில்.  - " ஏல மீன்பிடிக்கப் போறேன் வர்றியா" என்றான்.  " எங்க போய் மீன் பிடிக்கபோற" என்றேன் .  - "வாட்டர் டேங்குக்கு போய் மீன் பிடிக்கலாம் " என்றான்.  "வாட்டர் டேங்க்" என்றவுடன் எனக்கு சற்று தயக்கமாக இருந்தது .   அது ஊரில் இருந்து சில நூறு மீட்டர் தூரத்தில் அமைந்து இருந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குடிநீரேற்றும் பகுதி . தாமிரபரணி ஆற்றில் இருந்தும் ,ஆத்தூரான் கால்வாயில் இருந்தும் இராட்சத மோட்டார் மூலமாக உரிஞ்சப்பட்ட தண்ணீர் மிகப்பெரிய தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு ஆத்தூர் , ஆறுமுகநேரி , காயல்பட்டினம் , வீரபாண்டிபட்டினம் மற்றும் திருச்செந்தூர் பகுதிகளுக்கு குழாய்கள் மூலம...

"தில்லையில் அம்பலம்"

Image
பாண்டிச்சேரியில் மூன்று மாதகாலம் தொழிற்பயிற்சிக்காக எங்கள் கல்லூரியில் இருந்து நண்பர்கள் பனிரெண்டு பேர் சென்றிருந்தோம். முதன் முறையாக குடும்பத்தை விட்டு தொலைதூர பயணம் . முதல் சில நாட்கள் மனதிற்குள் ஒரு இனம் புரியாத தனிமை என்னை வாட்டி வதைத்தது. நாட்கள் போகப்போக நண்பர்களின் ஆதரவின் காரணமாக சகஜமானேன் . பிறகு விடுமுறை தினங்களில் நானும் நண்பர்களும் பாணடிச்சேரியையும் அதை சுற்றி இருக்கும் இடங்களையும் சுற்றி பார்த்தோம் . ஒவ்வொரு வாரமும் விடுமுறை கழிந்தபின் அடுத்த வார விடுமுறைக்காக காத்திருக்கலானோம்.. இதோ அடுத்த வாரம் வேலைக்கான கால அட்டவணை வெளியாகி விட்டது . வரும் வாரம் புதன்கிழமை எனக்கும் என் நண்பன் ராம்குமாருக்கும் விடுமுறை . இருவரும் பாண்டிச்சேரியில் இருந்து அறுபத்திஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த புகழ் பெற்ற தில்லை நடராஜர் கோவிலுக்கு சென்று நடராஜரை தரிசித்து வரலாம் என்று முடிவு செய்தோம். அதற்கு இன்னும் நான்கு தினங்கள் இருந்தன . ஆனாலும் தினம் தினம் நண்பர்களிடம் அங்கு போவதை பற்றி சிலாகித்து பேசிவந்தேன் . எப்போதும் "தில்லையம்பல நடராஜா" என்ற பாடலை முனு முனுத...