Posts

மறக்கமுடியாத பாடல்களும் ! அதை தொடர்புடைய நினைவுகளும் !

Image
இசையில் மயங்காதவர் யாரும் இல்லை , திரையிசை பாடல்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவத்தை கொடுக்கிறது. சிலருக்கு தனிமையை கடப்பதற்கு , சிலருக்கு தனிமையை ரசிப்பதற்கு , சிலருக்கு மனதை உற்சாகமூட்டுவதற்கு , சிலருக்கு மனதை ஆற்றுவதற்கு,  சிலருக்கு உடல் களைப்பு நீங்க ,  சிலருக்கு மனக்கவலைகளை மறக்க,  சிலருக்கு மன அமைதியை கொடுக்க . என உலகில் ஒவ்வொருவருக்கும் எதோ ஒரு வகையில் இசை பிடித்திருக்கும் . அதற்கு நானும் விதிவிலக்கில்லை. காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை இந்த உலகின் ஒவ்வொரு தருணங்களையும் மெல்லிய இசையுடனே ரசிக்க பிடிக்கும் .அப்படி சில  பாடல்கள் சிலரையும் அவர்கள் தொடர்புடைய நிகழ்வுகளையும் மறக்கமுடியாத நினைவுகளாக மாற்றி இருக்கிறது மனதில்  ...        அப்பா தீவிர சிவாஜி ரசிகர் . சிவாஜி நடித்த திரைப்பட பாடல்கள் அவருக்கு பிடித்தமானது. ஒரு முறை நான் செய்த சேட்டைக்கு அப்பாவிடம் அடிவாங்கி தேம்பி , தேம்பி அழுது கொண்டே இருந்தேன் . ஒரு சில நிமிடங்களில் அப்பா நான் அழுவதை தாங்காமல் மனம் இறங்கி என்னை சமாதான படுத்த முயன்று.....

விவசாயிகளின் நண்பனை நம்பமுடிவதில்லை. . .

Image
   நீர் நிறைந்த நிலத்தில் வாழை தோட்டங்களும் , வெற்றிலை கொடிக்கால்களுமாக செழுமை செறிந்த நிலப்பரப்புகளுக்கு நடுவே அமைந்த எங்கள்  கிராமத்தை சுற்றி இருக்கும் குளிச்சியான தோட்டங்களில் தவளைகள் , வயல் எலிகள் அவற்றை உணவாக உண்ணும் பாம்புகளும் நிறைந்து இருந்தன . பாம்புகள் பொதுவாக கூச்ச சுபாவம் அதிகம் உள்ளவை . அவை மனிதர்களை தேடிவந்து கடிப்பதில்லை.  அவற்றுக்கு ஆபத்து என்று உணரும் போது அவை தாக்க முயல்கின்றன. பொதுவாக பாம்புகள் மனிதரை நெருங்க விரும்புவதில்லை. மனிதர்கள் இருப்பதை உணர்ந்தால் அவை விலகிச் செல்லவே நினைக்கின்றன . வயல்வெளிகளில் பாம்புகள் எலிகளைப் பிடித்து தனக்கு உணவாக்கிக்கொள்வதால் விவசாயிகளின் நண்பனாக பார்க்கப்படுகின்றன. ஆனாலும் சில நேரம் அவற்றினால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது மக்களுக்கு அவற்றை கண்டால் பயமும் , கொல்லவும் முயல்கின்றார்கள்.            சுமார் 30 வருடங்களுக்கு முன்பு ஆத்தூர் மெயின் பஜாரில் இருந்து எங்கள் ஊருக்கு செம்மண்கலந்து சிறு சரல் கற்களை கொட்டி அமைக்கப்பட்டு இருந்த  அந்த இருபது அ...

மனித பிணைப்பு ..

Image
     சமுகத்தில் மனிதம் மறைய காரணம் அதன் அடித்தளமான குடும்ப உறவுகள் சிதைந்தது தான். பணம் சேர்க்கும் அவசர உலகத்தில் மனிதர்களின் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது.   எனக்கு எப்பொழுதும் எதையோ தலையில் சமந்தபடி ஓடுவது போல ஒர் உணர்வு ... இந்த சமுகத்தை எதிர் கொள்ள அந்த சுமை எனும் பணம் தேவைப்படுகிறது. அது இன்றி சமுகத்தை எதிர்கொள்ள பயமாக இருக்கிறது...அந்த பயம் இந்த சமுகத்திடம் இருந்தே எனக்குள் திணிக்கப்பட்டிருந்தது. அதற்குள் இருந்து வெளிவர இயலவில்லை..   ஆனால் இந்த பாரத்தை தூக்கிச் சுமந்து  கொண்டு என் தந்தை நடந்ததாக நினைவில்லை .. அவரும் அவரைச்சார்ந்த மனிதர்களுமாக வெகு எளிதாக இந்த வாழ்கையை வாழ்ந்திருந்தார்கள்.. பணத்தை சேர்க்க வேண்டும் என்று நினைத்து ஒரு நாளும் அவர் ஓடியதில்லை... இந்த சமுகத்தை எதிர் கொள்ள அவருக்கு அது தேவைப்படவில்லை . அதை விட உயர்வான மனித மனங்களை சேர்த்து வைத்திருந்தார்.  புற்று நோயின் பாதிப்பில் தன் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த அப்பா . வீட்டில் சிறு சேமிப்புகளும் இல்லாத நிலையிலும் .மிகச்சிறப்பாக நடத்தி முடிந்த என் மூத்த சகோதரி...

மாப்பிள்ளை தோழர்கள் ( Groom Friends )

Image
           ஊரில் நண்பர்கள் வீட்டு திருமண விசேஷங்களில் சடங்குகள், சம்பிரதாயங்கள் நடக்கும் இடங்களில் நிற்காமல் அந்த இடங்களை விட்டு  500 அடி தள்ளி ஒரு கும்பல் நிற்கும் அவனுவ தான் மாப்பிள்ளையின் நண்பர்கள் . மாப்பிள்ளை முறுக்கு என்று சொல்லுவாங்கல்ல  அது மாப்பிள்ளையை விட இவனுவகிட்ட தான் ரொம்ப ஓவரா இருக்கும் . திருமணவாழ்த்து வால்போஸ்டர் ஒட்டுறது , ஊர் இளைஞர்கள் சங்கம் சார்பாக மணமக்களுக்கு வாழ்த்துமடல் கொடுப்பது ,  வேர்க்க விறுவிறுக்க  ஓடியாடி பந்தி பரிமாறுவது என இவனுவ செய்ற அலப்பறைகள் கொஞ்சம்  வேறுரகம்.        கல்யாணத்திற்கு முந்திய நாள் இரவு ஊர் தூங்கும் நேரத்தில இந்த கும்பல் கையில் பசை வாளியும்,  தங்கள் பெயர் போட்டு அடித்த வால்போஸ்டரையும் தூக்கி கொண்டு கிளம்பும்.. ஊருக்குள்ள கல்யாணமாப்பிள்ளை வீட்டில இருந்து மணபெண்ணின் வீடு வரை ஜனம் அதிகமா கூடுற இடங்களிளையும், புதிதாக வெள்ளையடித்து விளம்பரங்கள் செய்யாதீர்கள் என்று எழுதி இருக்கும் சுவத்துலயும், ஊர்களின் பெயரை சுமந்து நிற்கும் பெயர் பலகைகளிலும் . தன்னுடன...

காலத்தினால் செய்த நன்றி

Image
 கொரோனா பரவல் அதிகரிக்க ஆரம்பித்த காலம் , அரசின் பொதுமுடக்க உத்தரவின் காரணமாக யாரும்   வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை . வாகனங்கள் ஓடவில்லை, அரசு மருத்துவமனையை தவிர அனைத்து மருத்துவமனைகளும் ,கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. அத்தியாவசிய பொருட்களுக்காக மக்கள் அலைந்த அலைச்சல் பட்ட கஷ்டம் சொல்லி மாளாது. இந்த இரண்டு வருடங்களில் நம் அன்புக்கும் பாசத்திற்கும் உரிய பலரை இழந்து இருக்கின்றோம். முதல் அலை வரும் போது மக்களிடம் அந்த அளவு விழிப்புணர்வு இல்லை. ஆஸ்பத்திரியில் தனிமை படுத்தப்பட்டவர்கள் அங்கு சென்று பாட்டு, நடனம் என குதூகலமாக பொழுதை கழித்தனர் அது போதாது என்று அவர்கள் அதை வீடியோ படம் எடுத்து சமூக ஊடகங்களிலும் பரப்பி விட்டனர் . நானும் ஒன்றும் இல்லாததை அரசாங்கம் பெரிது படுத்துகின்றது என்றே நினைத்தேன், இரண்டாவது கொரோனா அலையில் உறவினர்களையும் ,நண்பர்களையும் இழக்கும் வரை .  என் வீட்டாரை ஆரம்பத்தில் இருந்தே எச்சரித்து கொண்டே இருந்தேன். வேலை காரணமாக தூர தேசத்தில் நான் இருந்ததால் அவர்களுக்கு ஒன்று என்றால் என்ன செய்வது என்ற கவலை என்னை ஆக்கிரமித்து இருந்தது க.    ...

"கள்ளும் கற்று மற"

Image
    சங்கால இலக்கியங்களில் மதுபானம் பற்றி நிறைய குறிப்புகள் காணப்படுகின்றன. " கள்" ‍என்ற வார்த்தை களித்திருத்தல் (இன்பமாக இருத்தல்) என்ற சொல்லிருந்து வந்ததாகும். ‌"கள்" என்ற சொல் சங்க இலக்கியத்தில் வெறிநீர், பதநீர், மட்டு, தேன் ஆகிய நால்வகை பதங்களோடு குறிக்கப்படுகிறது.  மதுவில் தென்னங்கள், பனைக்கள், அரிசிக்கள், தோப்பி, தேக்கள், பிழி ,மணங்கமழ் தேறல், பூக்கமழ் தேறல்,நறவு என பலவகைகள் உண்டு. நெல்லால் சமைத்த கள் நறவு எனவும்,  தேனால் சமைத்த கள் தேறல் எனவும்,  பூக்களால் தயாரிக்கப்பட்டு அத்துடன் குங்குமப் பூவையும் இட்டு தருகிற கள் தெளிவுக்கு பூக்கமழ் தேறல் எனவும் பெயர்.கள் தயாரிக்கும் முறைகூட சில பாடல்களில் விளக்கப்படுகின்றன. ஊர் திருவிழாவிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பதற்காக சொந்தமாக மதுபானங்களை தயாரிக்கும் பழக்கம் தமிழ் சமுதாயங்களில் இருந்தது .தமிழ்நாட்டின் பனங்கள்ளும் , கேரளத்தின் தென்னங்கள்ளும் மிகவும் பிரபலம் . தமிழ்நாட்டில் பனங்கள் இறக்குவது தற்போது அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டு உள்ளது ..       ...

கடைக்குட்டி சிங்கம் .

Image
     சிறுவயதில் இருந்தே விடுமுறை நாட்களில்  அப்பாவுடன்  கடைக்கு சென்று வந்து கொண்டிருந்ததால் நான் தெற்கு ஆத்தூர் பஜாரில் பலருக்கும் பரீட்சியமான முகம் ஆகி போனேன் . அது சிலநேரங்களில் நல்லதாகவும் பலநேரங்களில் அதுவே  கெட்டதாகவும் மாறி போகும்.  திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் விலங்கியல் படித்த போது ஒருநாள்  வகுப்பை கட் அடித்து விட்டு நண்பர்களுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு திருவிழா பார்க்க சென்றேன் . அங்கு அப்பாவிற்கு நன்கு பழக்கமான ஒருவர் என்னை பார்த்திருக்கின்றார் நான் அதை கவனிக்கவில்லை. சில நாட்கள்  கழித்து ஒருநாள் நான் அப்பாவுடன் கடையில் இருக்கும் போது வந்து தம்பி உன்னை அன்னைக்கு  திருச்செந்தூர் கோவில் பக்கம் பார்த்த மாதிரி இருந்ததே என்று கூற. அதை கேட்டு அப்பா என்னை பார்த்து முறைக்க எனக்கு பில்டிங் மட்டும் அல்ல பேஸ்மென்டும் சேர்ந்து ஆட்டம் கண்டுவிட்டது. நான் சற்று சுதாரித்துக் கொண்டு அப்படி இருக்க வாய்பில்லை என முந்தானை முடிச்சு ஊர்வசி மாதிரி துண்டு போட்டு தாண்டாத குறையாக தாண்டி  "பொய்மையும் வாய்மை யிடத்த...